Saturday, May 23, 2020

உயிரெழுத்து கவிதை! அ ஆ இ ஈ ....

அன்புற்ற உள்ளத்தில்
ஆசைகள் ஆயிரம்கோடி
இன்பத்தை தாண்டியும்
ஈடில்லா வாழ்வுகாக
உச்சகட்ட ஆசையோடு
ஊக்குவிக்கும் உள்ளத்திலே
என்றுமே நிராசை
ஏக்கமுற்ற இதயத்திலே
ஐந்தாறு பிளவுகள்
ஒவ்வொரு நொடியிலும்
ஓய்ந்திடாத மனவருத்தம்
ஔடதமான நினைவுகளால்...

No comments:

Post a Comment