Tuesday, November 4, 2014

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்...


1) உங்களை சந்திக்க நீண்ட தூரம் பயணம்
செய்து கால் வலிக்க அவள்
காத்திருப்பாள்

2) அவள் மீது தவறே இல்லாவிட்டாலும்
உங்களுடன் சமாதானம் ஆக
அடிக்கடி மன்னிப்பு கேட்பாள்.

3) உங்கள் வார்த்தை தரும் வலியில் கண்ணீர்
வடிந்தாலும்
அடுத்தகனமே புன்னகையில்
அதை மறைத்திடுவாள் .

4) நீங்கள்
எத்தனை முறை காயப்படுத்தி இருந்தாலும்
அதை பொருட்படுத்தாமல் உங்கள்
மீது கொண்ட நேசம் மட்டும் குறையாமல்
பார்த்துக் கொள்வாள்.

5) இருவரும் விவாதிக்கும் விடயத்தில்
அவள் சொல்லும் கருத்து சரியாக
இருக்கும் போதிலும்
விவாதத்தை தொடராமல்
முடிக்கவே முயற்சி செய்வாள் உங்கள்
உறவு முறிந்து போகாமல் இருக்க.

6)சிறு சிறு குறும்புகள் செய்தேனும்
உங்களை சிரிக்க வைக்க முயற்சிப்பாள்.
நீங்கள் அவளுக்கு எத்தனை முக்கியமானவர்
என்பதை அடிக்கடி உறுதி செய்வாள்.

7)நீங்கள் சந்தோசமாக இருக்கும்
தருணத்தில் அவள் கவலையாக இருந்தால் ,
அதைப் பகிர்ந்து உங்கள் சந்தோசம்
கெட்டு விடக்
கூடாதென்று கவலைகளைக் கண்ணில்
மறைப்பாள்.

8)உங்களின் ஒரு சில முரட்டு குணங்கள்
அவளை பாதித்தாலும்
உங்களை விட்டு விலகும் எண்ணம்
இல்லாதவளாய் இருப்பாள்.

9)உங்கள் குடும்பத்திலும் நண்பர்
வட்டத்திலும் நீங்கள் மதிப்போரையும்
நேசிப்போரையும் அவளும் நேசிப்பாள்.

10)நீங்கள் தொலைப் பேசியில்
அழைக்காவிட்டாலும் அவள்
அழைப்புக்கு பதிலளிக்கா விட்டாலும் ,
அதற்கு நீங்கள் தரும் விளக்கத்தையும்
உங்கள் சூழ்நிலையையும் புரிந்துக்
கொள்வாள்...


 Enakku Irukkapa! Ungalukku?

No comments:

Post a Comment